தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளா? அமைச்சர் விளக்கம்!


தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளா? அமைச்சர் விளக்கம்!


"கொரோனாவால் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது, எனவே மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், " பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது கவனமாக அனுப்ப வேண்டும். அவர்களுக்கு தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஓபிஎஸ் பதவி காலாவதியாகிவிட்டது: சி.வி.சண்முகம் பேச்சு!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 92 சதவீதம் பேர் வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர். கொரோனா கேர் சென்டர் என்ற வகையில் சென்னை மாநகராட்சி சார்பில், தண்டையார்பேட்டை தொற்று மருத்துவமனையில் மட்டுமே ஒரு 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா கேர் சென்டர் ஒரு மூன்று நான்கு இடங்களில் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிரந்தரப் படுக்கைகள் என்பது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கான படுக்கைகள் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, கேஎம்சி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில், ஒவ்வொரு மருத்துவமனையிலும் 200 முதல் 300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
உதயநிதிக்கு உச்ச பதவி: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
எனவே பெரிய அளவில் அச்சப்பட வேண்டிய கவலை இல்லை. 8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர். முகக்கவசம் அணிவது அவசியம். நம் உயிரை நாம் பாதுகாத்துக் கொள்வது அவசியம். கொரோனா அதிகரித்தாலும் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இல்லை. கொரோனாவால் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது, எனவே மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்" என்று அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

GET ON THE DIAGONAL WITH THE CURVY CHRISTMAS