விவாகரத்துக்கு பின்.. தனுஷ் – ஐஸ்வர்யா வீட்டில் ரகசிய சந்திப்பு.. காரணம் என்ன ?


விவாகரத்துக்கு பின்.. தனுஷ் – ஐஸ்வர்யா வீட்டில் ரகசிய சந்திப்பு.. காரணம் என்ன ?


விவாகரத்து அறிவிக்குப்பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் படு பிஸியானார்கள். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை பிரிந்து இருக்கிறார்கள். விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறிய நிலையில், இருவரும் குழந்தைகளுக்காக சேர்ந்துவிடுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார். ரஜினிகாந்த் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தபோதும் தனுஷ் அதை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

பிரிவு அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, தனுஷ் மாறன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.

இதையடுத்து பயணி ஆல்பம் வெளியான போது தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என்று கூறி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதனால், கடுப்பான ஐஸ்வர்யா, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றினார். இதனால், இவர்கள் இருவரும் இனி சேரவே வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து, தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்துகொள்வதாக கிசுகிசு ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவிவருகிறது. அதாவது, விவாகரத்துக்கு முன் இருவரும் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். அந்த வீட்டிற்கு தான், தற்போது இருவரும் அடிக்கடி சென்று வருவதாகவும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருவர் இடையேவும் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்றும், குழந்தைகளுக்காக இருவரும் தங்கள் முடிவை மாற்றி இருக்கலாம் அதற்காக இருவரும் சந்தித்து பேசி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Comments

Popular posts from this blog

Gino D rsquo Acampo limoncetti biscuits with limoncello liqueur and ice cream recipe on Gino rsquo s Italian Express #Limoncello